கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, January 24, 2012

எது தமிழர் திருநாள்?கலைஞர் பேட்டி


தமிழர்களுக்கு எது உண்மையான தமிழர் திருநாள் என்பது குறித் தும், நிவாரணப் பணி கள் குறித்தும் செய்தி யாளர்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டியளித்தார். புயல், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதி களில் சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் காரி லேயே பயணம் செய்து விட்டு, திருவாரூரிலி ருந்து புகை வண்டி மூல மாக சென்னை திரும்பிய தலைவர் கலைஞர் அவர் களை எழும்பூர் புகை வண்டி நிலையத்தில் சந்தித்த செய்தியாளர் கள் கேட்ட கேள்வி களும், அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த பதில் களும் வருமாறு:-
செய்தியாளர் :- புயல், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதி களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து விட்டுதிரும்பியிருக் கிறீர்கள். தங்கள் சுற்றுப் பயணம்எவ்வாறு அமைந்தது?
கலைஞர் :- என் னைப் பார்த்ததில் மக்க ளுக்கு ஆறுதல், பாதிக் கப்பட்ட மக்களை நேரில் பார்த்ததில் எனக்கு ஆறுதல்.
செய்தியாளர் :- அரசு நிவாரணப் பணி கள் மிகவும் மெத்தன மாக நடைபெறுகின் றன. மக்களுக்கு பால்கிடைக்கவில்லை.டீ கூட குடிப்பதற்கு அவர் களுக்கு வசதியில்லை. அரசு எந்த அளவிற்கு மெத்தனமாகச் செயல் பட்டுக் கொண்டிருக் கிறது?
கலைஞர் :- இந்த மாதிரியான காரியங் களில், இந்த மாதிரியான நேரங்களில் எந்த அர சாக இருந்தாலும், அந்த அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் பணி என்று கருதுபவன் நான். எனவே அந்தப் பணியை முறையாகச் செய்திருக் கிறேன்.
செய்தியாளர்: - நிவாரணப் பணிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எப்படி செயல்பட்டிருக்கின்றன? அவர்களுக்கு நீங்கள் ஏதாவது கோரிக்கை வைக்கிறீர்களா?
கலைஞர்:- தன் னார்வத் தொண்டு நிறுவனங்கள் இப் போதே உதவிகளைச் செய்து தான் வருகின் றன. மேலும் அந்தப் பணிகள்தொடர வேண்டுமென்று விரும்புகிறேன். அந்த நிறுவனங்களையும் வேண்டுகிறேன்.
செய்தியாளர் :- தமிழர் திருநாள் வரு கிறது. ஏற்கனவே நீங்கள் பொங்கல் திருநாளை யொட்டி தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழர் திருநாள் என்று சொல்லி யிருந்தீர்கள். தற்போது ஜெயலலிதா ஏப்ரல் மாதம் தான் தமிழர் திருநாள் தொடங்கு வதாக சொல்கிறாரே?
கலைஞர் :- தமிழர்கள்தான் எந்த நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு உரிமை உடையவர்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் நாளை யொட்டி தமிழர் திருநாளாகக் கடைப் பிடித்த அதே தைத் திங்கள் முதல் நாளைத் தான் இந்த ஆண்டும் தொடர்ந்து கொண் டாடுவோம்.
செய்தியாளர் :- புயல், மழையினால் பாதிக்கப்பட்ட மக் களை முதலமைச்சர் நேரில் சந்திக்கவில்லை என்ற மனக்குமுறல் மக்களிடையே பெரு வாரியாக உள்ளது. ஒருவரைக்கூட பாதிக் கப்பட்டவர்களைச் சந் திக்காமல், ஹெலிகாப் டரிலேயே வந்து விட்டு பத்தே நிமிடங்களில் ஜெயலலிதா திரும்பி விட்டார் என்ற குறை பாடு மக்களி டையே இருக்கிறதே?

கலைஞர் :- அதைப் பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை. அது தேவையும் இல்லை.
-இவ்வாறு செய்தியா ளர்களிடம் தலைவர் கலைஞர் அவர்கள் கூறி னார்.

No comments:

Post a Comment