கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 30, 2011

மக்கள் இழித்துரையிலிருந்து தப்பிக்கவே புதிய தலைமைச் செயலக கட்டிட விசாரணை கமிஷன் - கலைஞர்


மக்கள் இழித்துரையிலிருந்து தப்பிக்கவே புதிய தலைமைச் செயலக கட்டிடம் குறித்து ஜெயலலிதா விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி 29.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து எழுந்துள்ள புகார்கள் பற்றி விசாரிப்பதற்காக நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது. புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்து, இதுவரை யாரும் புகார்கள் கொடுத்ததாக எந்தச் செய்தியும் ஏடுகளிலே வரவில்லை.
தமிழக அரசினரே தங்களுக்குத் தாங்களே புகார் வந்ததாக செயற்கையாக கூறிக்கொண்டு, அந்த புகார்களை விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள அந்த புதிய தலைமைச் செயலகத்தில் வந்து குடிபுகாமல் இருப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட அந்த மாளிகையைப் பயன்படுத்தாமல் இருப்பதால், தன்னை பொதுமக்கள் இழித்துரைக்கக் கூடும் என்பதை நன்குணர்ந்த ஜெயலலிதா, அந்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காகத் தான் திட்டமிட்டு வேண்டுமென்றே இப்படியொரு விசாரணைக் கமிஷனை அமைத்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே உணர்வார்கள்.
இதற்காகவே ஒரு புகார் பட்டியலை இவர்களாகவே தயாரித்துக் கொண்டு, அதன் மீது இந்த விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கான வரையறைகளாக கட்டுமானத் தரத்தில் குறைகள் கட்டுமானப் பணியை முடிக்க தேவையில்லாத காலதாமதம் கட்டுமானத்தின்போது பல முறைகேடுகள் தேவையில்லாத செலவினங்கள் என்றெல்லாம் இட்டுக்கட்டி கூறப்பட்டுள்ளன. தேவையில்லாத செலவினங்கள் என்று விசாரணையாம்.
விசாரணை வைத்திருப்பவர்கள் யார் தெரியுமா? முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்குச் சென்று ஒரு நாள் பிரதமரை மரியாதைக்காக சந்திக்கச் சென்றார் என்பதற்காக முதல் அமைச்சர் தங்கும் அறையே மாற்றம் செய்யப்பட்டது, சாலையே புதிதாக போடப்பட்டது, இதற்காக தனியாகச் செலவழிக்கப்பட்டது எவ்வளவு?
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்த மறுத்து, மீண்டும் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அங்கே சட்டமன்றப் பேரவையை உருவாக்குவதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு? பழைய தலைமைச் செயலகத்திலேயே தொடர்ந்து செயல்படுவதற்காக செய்யப்பட்ட செலவுகள் எவ்வளவு? சாதாரண பயணிகள் செல்லும் விமானத்தைப் பயன்படுத்தாமல் தனியார் விமானத்தை முதலமைச்சர் கையாளுவதால் ஏற்படும் செலவுகள் எவ்வளவு? இந்த வீண் செலவுகளைப் பற்றியெல்லாம் விசாரணைகள் வேண்டாமா?
விசாரணை ஆணையத்திற்கு தலைமையேற்கப் போகிறவர் யார்? நீதிபதி தங்கராஜ். இவரைப் பற்றிய வரலாற்றை தமிழ்நாடு மறந்திருக்கக் கூடும். எனவே, அதை மீண்டும் நினைவூட்டுகிறேன். தமிழக அரசின் தொழில்துறைக்குச் சொந்தமான தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்திற்கு, அதாவது டான்சி நிறுவனத்திற்கு உரிய வார்ப்படத் தொழிற்சாலை 1985ம் ஆண்டு மூடப்பட்டது.
1991ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா, தொழில் துறையையும் தன் பொறுப்பில் வைத்துக் கொண்டார். 1991ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவும், அவரது உடன்பிறவாச் சகோதரி சசிகலாவும் ஜெயா பதிப்பகத்தின் பங்குதாரர்கள் என்ற வகையில், கிண்டியில் உள்ள டான்சிக்குச் சொந்தமான அந்த மதிப்புமிக்க நிலத்தை வாங்குவதற்காக டான்சியின் நிர்வாக இயக்குனருக்கு விண்ணப்பித்தனர்.
அந்த நிலம் 3.0786 ஏக்கர் அல்லது 12.462 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அங்கு கட்டப்பட்ட கட்டிடத்தின் அளவு 30,196 சதுர அடி. அரசு மதிப்பின்படி அந்த நிலம்
ஸீ4.43
கோடி. பொதுப்பணித்துறை மதிப்பீட்டின்படி அந்தக் கட்டிடம் மற்றும் இயந்திரங்களுடன் சேர்ந்து அதன் மொத்த மதிப்பு
ஸீ4.93
கோடி.
ஜெயா பதிப்பகம் அதை
ஸீ1.82
கோடிக்கு ஏலம் கேட்டு, பின்னர் வாங்கிக் கொண்டது. தொழில் துறைக்கு பொறுப்பேற்றவர் என்ற முறையில் ஜெயலலிதாவே அந்த நிலத்தை விற்பவர், ஜெயா பதிப்பகத்தின் பங்குதாரர் என்ற முறையில் ஜெயலலிதாவே அந்த நிலத்தை வாங்குபவர். இது, இந்தியத் தண்டனைச் சட்டம் 169ம் பிரிவின்படி குற்றமாகும். வெகு சில விளக்கங்களுடன் மிகக் குறைந்த அளவே வெளியாகும் தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் ஒரே ஒரு முறை விளம்பரம் செய்யப்பட்டு, அதற்கான விற்பனை முடிவானது.
அரசின் கணக்குப்படி அந்த நிலத்திற்கு
ஸீ57.58
லட்சம் பத்திரப் பதிவிற்காக வாங்கியிருக்க வேண்டும். ஆனால் மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய காரணத்தால்,
ஸீ24.36
லட்சம் தான் பத்திரப் பதிவுக்கான கட்டணமாக வாங்கப்பட்டது. இந்த வழக்கிற்கான ஆதாரங்களைப் பரிசீலித்த தனி நீதிமன்றம் இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட் டது. இந்த வழக்கிற்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்தார். அந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, அந்த வழக்கை தனி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்த தகுந்த அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.
அவ்வாறு தீர்ப்பு கூறிய உயர் நீதிமன்ற நீதிபதிதான் எஸ்.தங்கராஜ். அப்போதே அந்தத் தீர்ப்பு பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. பெரும்பாலான ஏடுகளும், சட்ட நிபுணர்களும் அந்தத் தீர்ப்பு சரியல்ல என்று கருத்து வெளியிட்டார்கள். வார இதழ் கல்கி ஏடு, ஜெயலலிதா நீங்கலான அனைத்து இந்தியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்த தீர்ப்பு இது என்று கூறியது. அவரைத்தான் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலகக் கட்டிடத்திற்கான விசாரணை ஆணையத்தின் தலைவராக தமிழக அரசு தேடிப்பிடித்து நியமித்துள்ளது.
பின்னர் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றதும், அங்கே இந்த நிலத்தை ஜெயலலிதா, அரசுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பு கூறியதும் அனைவரும் அறிந்த உண்மை என்பதால், அதுபற்றியெல்லாம் நான் விவரித்திட விரும்பவில்லை.
மற்றொரு நிகழ்ச்சி. சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் வேலுச்சாமி. இவரிடம் அண்ணா நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் எஸ்.கே. கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டை
ஸீ10
லட்சத்துக்கு அடமானம் வைத்தார். பிறகு அந்த வீட்டை கிருஷ்ணமூர்த்தி, மலேசியாவில் உள்ள தொழிலதிபர் ஜெயபால் என்பவருக்கு விற்றுவிட்டார்.
இதனால் வேலுச்சாமி பணத்தைத் திருப்பிக் கேட்டார். கிருஷ்ணமூர்த்தி பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அடமானம் வைத்த வீட்டை ஏலத்துக்குக் கொண்டு வர வேலுச்சாமி ஏற்பாடு செய்தார்.
இதையறிந்த கிருஷ்ணமூர்த்தி நேராக வேலுச்சாமி அலுவலகத்துக்குச் சென்று வீட்டு அடமான பத்திரத்தைக் கேட்டு தகராறு செய்தார். அப்போது துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். உடனே வேலுச்சாமி சத்தம் போட்டார். இந்தச் சத்தத்தைக் கேட்டதும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் கிருஷ்ணமூர்த்தி ஆட்டோவில் தப்பி ஓடி விட்டார்.
இதைப்பற்றி வேலுச்சாமி திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அவர் வீடியோ கடையில் சோதனை போட்டனர். அங்கிருந்த ஆபாச சி.டி.க்கள், கேசட்டுகளை கைப்பற்றினர். அவரது வீட்டில் சோதனை போட்டபோது போலி துப்பாக்கி, முக்கியமான தஸ்தாவேஜ்கள் சிக்கியது. இதனால் கிருஷ்ணமூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தார்கள்.
கிருஷ்ணமூர்த்தி போலீசாரிடம் கூறிய விவரம், நான் ரியல் எஸ்டேட் வீடியோ கடை வைத்து நடத்தி வருகிறேன். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதால் அரசியல் கட்சி பிரமுகர்கள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் உட்பட பலரிடம் பழக்கம் ஏற்பட்டது. மலேசியாவில்கூட நண்பர் உண்டு.
கடந்த 16&10&1999ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் நான், உயர் நீதிமன்ற நீதிபதி தங்கராஜ், வழக்கறிஞர் செல்வராஜ், ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரெண்ட் செல்வரத்தினம் ஆகியோர் மலேசியாவுக்குச் சென்றோம். அங்கு தொழிலதிபர் ஜெயபால் ஏற்பாடு செய்த நட்சத்திர ஓட்டலில் 10 நாட்கள் தங்கியிருந்து விட்டு, 26&10&99ம் தேதி திரும்பி வந்தோம். இவ்வாறு அவர் கூறியதாக அப்போது ஏடுகளிலே பரபரப்பாகச் செய்தி வந்தது.
அப்படிப்பட்ட குற்றவாளி கிருஷ்ணமூர்த்தியுடன் 10 நாட்கள் மலேசியா சென்று தங்கியிருந்து விட்டு வந்ததாக சொல்லப்பட்டவர்தான் நீதிபதி தங்கராஜ். அவர்தான் தற்போது தலைமைச் செயலகக் கட்டிடத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறார். நீதியரசர் மலேசியாவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம்கூட அப்போதே வெளிவந்தன. எந்த அளவுக்குப் பொருத்தமானவரை விசாரணை ஆணையத்தின் தலைவராக அதிமுக அரசு தேடிப்பிடித்து நியமித்திருக்கிறது என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா?
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment