கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 24, 2010

கலைஞருடன் சந்திப்பு-ரஜினிகாந்த் அழைப்பு


முதல்வர் கருணாநிதியை ரஜினி நேற்று நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது தனது இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு நேரில் வந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையில் கட்டுமான தொழில் செய்யும் அஸ்வின் ராம்குமாருக்கும் செப்டம்பர் 3-ந்தேதி திருமணம் நடக்கிறது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்


எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை, ராஜா முத்தையா மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. சவுந்தர்யாவுக்கு பாரம்பரிய காஞ்சீபுரம் பட்டுச் சேலை முகூர்த்தத்துக்கு பிரத்யேகமாக தயாராகி வருகிறது.

சவுந்தர்யா திருமணத்திற்காக மூன்று விதங்களில் தயாராகியுள்ள அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.


முக்கியமானவர்களுக்கு ரஜினி நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துவருகிறார்.

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயா, மகன் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். ரஜினிக்கு நெருக்கமான ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவும் திருமணத்துக்கு அழைக்கப்படுகிறார். மேலும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போன்றோரும் திருமணத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பட உலகினரும் பெருமளவில் வருகிறார்கள்.

திருமண அழைப்பிதழை சவுந்தர்யாவும், அஸ்வின் ராம்குமாரும் தேர்வு செய்துள்ளனர். முக்கிய பிரமுகர்களுக்கு அவர்களே நேரடியாக கொடுக்கின்றனர்.


No comments:

Post a Comment