கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 25, 2010

ரூபாய் நோட்டு குறியீடு: உதயகுமாருக்கு கலைஞர் வாழ்த்து


இந்திய ரூபாய் நோட்டுக்கு குறியீடு உருவாக்கும் போட்டியில் சென்னையை சேர்ந்த உதயகுமார் என்ற பட்டதாரி கலந்து கொண்டார்.

கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி.யில் உதவி பேராசியராக பணி புரிந்து வரும் அவர் குறியீட்டை மத்திய அரசு தேர்ந்து எடுத்து அறிவித்தது. வெற்றி பெற்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


இதைத்தொடர்ந்து நேற்று உதயகுமார் குடும்பத்தினருடன் சென்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இச்சந்திப்பிற்கு பின்னர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர், ‘’நான் உருவாக்கிய குறியீடு இந்திய ரூபாய்க்கான குறியீடாக தேர்ந்து எடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.


இது சம்பந்தமாக முதலமைச்சர் கருணாநிதியை என்னுடைய குடும்பத்தாரோடு சந்தித்து அவருடைய வாழ்த்தை பெற்றேன். இது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது ஒரு பொன்னாள்.


முதலமைச்சர் வாழ்த்தை பெற்றதால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். முதலமைச்சர் கருணாநிதிக்கு இந்த குறியீடு குறித்த ஒரு புத்தகம் ஒன்றை வழங்கி உள்ளேன்.


அடுத்து என்னுடைய ஆசிரியர் பணியில் முழு நேரமாக ஈடுபடப்போகிறேன்’’என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment