கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, July 29, 2010

ஜெ.யை கண்டித்து ஆக.4ல் திமுக ஆர்ப்பாட்டம்


சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க அடிக்கடி வாய்தா வாங்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைக் கண்டித்து, திமுக இளைஞர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து, மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், சென்னை அன்பகத்தில் புதன்கிழமை (28.07.2010) மாலை நடைபெற்றது.


இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மீது எந்தெந்த வழக்குகளில் எத்தகைய தீர்ப்புகள் கூறப்பட்டிக்கின்றன என முதல்வர் கருணாநிதி பலமுறை சுட்டிக் காட்டியும், அதற்கு பதில் சொல்ல வழியில்லாமல் தன்னை ஊழலற்றவர் போல் காட்டிக் கொண்டு அன்றாடம் அறிக்கை விடுகிறார். சொத்து குவிப்பு வழக்கை 13 ஆண்டாக இழுத்தடிக்கும் ஜெயலலிதாவின் நடவடிக்கையை கண்டித்தும், மக்களை தொடர்ந்து அவமதித்து வரும் போக்கினை எதிர்த்தும், மக்கள் மன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வரும் 4ம் தேதி திமுக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில், திமுக முன்னணியினர், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்

முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, மக்கள் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் அறிந்திடும் வகையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதோடு, சாதனைகளை அச்சிட்டு வீடுகள்தோறும் வினியோகிக்க வேண்டும்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திமுக உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழாவை இந்த ஆண்டும் எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்ற 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த ஸ்டாலினிடம், இந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்துக்கு எதிரானது என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? ஆர்ப்பாட்டத்தை கைவிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஏற்கனவே இந்த ஆர்ப்பாட்டம் அறிவித்தப்படி நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஜெயலலிதாவின் கருத்துக்கள் பற்றி எனக்கு கவலையில்லை என்றார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்ததும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநில அரசியலில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார் என்று ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளில் இன்று செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன. இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு,


அது தவறான செய்தி என்றும், அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

No comments:

Post a Comment